பயணப்பொதியில் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சப்புஸ்கந்த பகுதியில் குப்பைமேட்டில் அநாதரவாக கிடந்த பயணப்பொதிக்குள் (சூட்கேஸ்) இருந்து, மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 44 வயதான பாத்திமா எனும் பெண் கடந்த 4ஆம் திகதி கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் களனி வலய குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்குளி பகுதியை சேர்ந்த தம்பதிகளான 36 வயதான ஆண்- பெண் இருவரையும் கைது செய்துள்ளனர்.
அதேவேளை குறித்த பெண்ணின் சடலத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக பாரவூர்தி ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments