16 வருட சிறைத்தண்டனை அனுபவித்து, தற்போது விடுதலையான முதியவர் மீண்டும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் எப்பாவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்னேரியா தும்பிரியபொல பகுதியை சேர்ந்த 79 வயது முதியவரே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளதாகவும், 17 மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நிலையில் , மீண்டும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முதியவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 06 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
No comments