Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சுகபோக வாழ்க்கை - இருவர் கைது!




சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதன் மூலம் பெறப்படும் பணத்தில் சுகபோக வாழ்க்கை அனுபவித்த சிறுமியின் உறவுக்கார பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணும் , மருதானையை சேர்ந்த 38 வயது ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 
 
மருதானை பகுதியை சேர்ந்த குறித்த சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து தனது பிறிதொரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு சிறுமியை தங்க வைத்து , சிறுமியை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று தலா 50ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு , நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். 
 
இவ்வாறாக சிறுமிக்கு 12 வயது முதல் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்துள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  , சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய பெண்ணையும் , சிறுமியிடம் பாலியல் தேவைக்காக வந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 
 
அதேவேளை சிறுமியிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் சில நபர்களை தாம் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
இதேவேளை கடந்த யூலை மாத பகுதியில் கல்கிசை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் தேவைக்காக விற்பனை செய்தவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். 
 
அந்த சிறுமியிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கின குற்றச்சாட்டில் , மதகுருமார்கள் , சட்டத்தரணிகள் , வர்த்தகர்கள் , மருத்துவர்கள்  , வெளிநாட்டு பிரமுகர்கள் என பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments