துப்பாக்கியால் சூட்டு ஒருவரைக் கொன்று புதைத்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஷ் மிஹிரங்க எனும் மன்னா ரமேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் அவிஸ்ஸாவளை நாபாவெலயில் உள்ள வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மற்றைய இரு சந்தேக நபர்களில் ஒருவர் மன்னா ரமேஷின் பிரதான உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவரின் சடலம் கிரிந்தவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதிரிகல நிஸ்ஸாரண வனப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
No comments