Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

எழுவைதீவில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விளக்கமறியலில் - 14 வயது சிறுவன் சிறைச்சாலை அத்தியட்சகர் பாதுகாப்பில்!


எழுவை தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
 
கைதானவர்களில் ஒருவர் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவரை எச்சரிக்கை செய்து சிறைச்சாலை அத்தியட்சகரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே நேற்று திங்கட்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை அடுத்தே நீதவான் மீனவர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார். 
 
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டு இருந்தது. குறித்த மீனவர்களும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 
அத்துடன் மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை மன்னார் நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
 24 மணி நேரத்தில் 69 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது 
 
 

No comments