Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காணி தகராறில் மாமனாரை படுகொலை செய்த மருமகன்!


காணி தகராறில் மாமனாரை படுகொலை செய்த பின்னர் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்த மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , ஓட்டமாவடி மஜ்மா நகரை சேர்ந்த அலியார் அப்துல் ஹமீத் (வயது 40) என்பவரே  உயிரிழந்துள்ளார். 
 
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 
 
நீண்டகாலமாக தாயின் சகோதரனான மாமனாருக்கும் , மருமகனுக்கும் இடையில் காணி ஒன்று தொடர்பில் தகராறு இருந்து வந்துள்ளது. அந்நிலையில் இன்றைய தினமும் காணி தொடர்பில் இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டள்ளது. 
 
ஒரு கட்டத்தில் வாய்த்தர்க்கம் முற்றிய போது , மருமகன் , மாமனாரை தாக்கிய வேளை அவர் உயிரிழந்துள்ளார். 
 
அதனை அடுத்து மருமகன் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments