கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வைத்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து , அனுராதபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் , பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , பலர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி வைத்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான குறித்த சொகுசு பேருந்து , அனுராதபுரம் ரம்பாவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ரம்பாவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments