தேங்காய் ஒன்றை திருடியதற்காக நபர் ஒருவரை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் நாத்தாண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தென்னந்தோட்டம் ஒன்றின் நிர்வாக அதிகாரிக்கு ஆதரவான சிலர், அந்த நபரை தாக்கியுள்ளனர். மிக மோசமான முறையில் தாக்குதல் நடத்திய நபர்கள்,தேங்காயை திருடினார் எனக் கூறப்படும் நபரின் ஆடைகளை களைந்த வீதியில் ஓடவிட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள், குறித்த தென்னந்தோட்டத்திற்கு எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்
No comments