ஜனவரி முதல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அட்டையைக் கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கிணங்க உரிய வேலைத் திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு என விசேட APP மற்றும் QR Code ஆகியவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு எவருக்கும் உரிமை உள்ளது. எனினும் மற்றொருவரின் உயிரை எச்சரிக்கைக்கு உட்படுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது.
அதனால் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதுடன் அத்துடன் பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளுமாறும் தாம் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
No comments