Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மீண்டும் அமைச்சரவை மாற்றம் ?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மீண்டும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இது பெரும்பாலும் நடக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தை போன்று ஜனாதிபதியின் இறுதி நிமிடத்தில் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் நாடு திரும்பியதும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நேற்று பல அமைச்சர்களிடம் ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக வினவியபோதும் இந்த மாற்றம் குறித்து தங்களுக்குத் தெரியாது என கூறினர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற மாற்றம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கும் வரை எந்த அமைச்சர்களுக்கும் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments