ஊர்காவற்துறை கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நயினாதீவை சேர்ந்த நடராசா தர்மபாலன் (வயது 58) என்பவரே என அவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் , கடந்த 09ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments