Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பெருங்கற்கால தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட யாழ்.ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு!


தொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று தொன்மையை பாதுகாத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி வலி, தென்மேற்கு -மானிப்பாய் பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 
 
குறித்த ஆனைக்கோட்டை – கரைப்பிட்டி மயானத்தில் அண்மைக்காலமாக சில சமூகவிரோதிகளால் இடம்பெற்றுவரும் மண் அகழ்வுகளால் அம்மண்பிட்டிகளில் காணப்படும் பெருங்கற்கால யுகத்திற்குரிய தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படுவதாகவும் இதனை தடுத்து நிறுத்தி அப்பகுதியை ஒரு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்திட வேண்டுமெனவும் சபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 

1980ஆம் ஆண்டில் ஆனைக்கோட்டை பகுதியில் கரைப்பிட்டி மயானத்தில் காணப்பட்ட மண்திட்டுக்களிடையே பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ,முனைவர்.பொ.இரகுபதி ஆகியோர் தலைமையில் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் குழாமினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இலங்கையில் மிகமிக பழமையான ஒரு அடக்ககுழியும் பல தொல்பொருள்களும் மீட்கப்பட்டன.
 
 அடக்ககுழிக்குள் காணப்பட்ட ஒரு எலும்புகூட்டின் அருகே காணப்பட்ட மட்பாட்டமொன்றில் காணப்பட்ட பொருட்களில் ஆனைக்கோட்டை முத்திரை என சிறப்பு பெற்ற "கோவேதன் " என பெருங்கற்கால தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட உலோக முத்திரை கிடைக்கப்பெற்ற சிறப்புடைய பகுதியாகும்.
 
இவ்வாறு தொல்லியல் சிறப்புடைய இப்பகுதியில் தொடரும் மண் அகழ்வுகளால் எங்கள் பண்டைய தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படும் நிலையில் மண் அகழ்வை தடுத்தி நிறுத்தி பாதுகாப்பட்ட பிரதேசமாக மாற்ற வேண்டுமென பிரதேசசபை உறுப்பினர் அருள்குமார் ஜோன் ஜிப்ரிக்கோ இந்த பிரேரணையை சபையில் முன்வைத்தார். 
 

இந்நிலையில் சபை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், இந்த தீர்மானத்தின் அடிப்படையில் துறைசார் அதிகாரிகள், வல்லுனர்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments