அம்பாறை திருக்கோவில் பகுதியில் , விநாயகர் சிலை ஒன்று இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில், கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையே நேற்று வியாழக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் , விநாயகர் சிலையில் , தும்பிக்கை மற்றும் கைகள் என்பன சேதமடைந்துள்ளது.
குறித்த விநாயகர் சிலை , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பொடியப்பு பியசேனவின் நிதி ஒதுக்கீட்டில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments