அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.
துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் சார்ஜெண்ட் , இரண்டு T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைகள் என்பவற்றுடன் பிறிதொரு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சரணடைந்துள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments