Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கிற்கு 54 வைத்திய அதிகாரிகள் நியமிப்பு!


வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அதிகாரிகள் நியமனம் மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த 23/12/2021 அன்று நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்நியமனத்தில் வடமாகாணத்திற்கு புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட மருத்துவமனைகளுக்கும், 14 பேர் மன்னார் மாவட்ட மருத்துவமனைகளுக்கும், 10 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கும், 8 பேர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், 7 பேர் வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக மேலும் 6 மருத்துவ அதிகாரிகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சினால் புதிதாக வழங்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் நியமனத்தின் போது வடமாகாணத்திற்கு 188 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments