Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். மாநகர பாதீடு மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!


 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி  வி.மணிவண்ணனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 
 
அதனை தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களை அடுத்து , நடைபெற்ற வாக்கெடுப்பில் பாதீட்டுக்கு ஆதரவாக முதல்வர் அணியை சேர்ந்த 10 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு   உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர் என 24 உறுப்பினர்கள்  ஆதரவாக வாக்களித்தனர். 
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் 16  உறுப்பினர்களும்,    அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 2 உறுப்பினர்களும் என  21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். 
 
இதற்கமை யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 3  மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

No comments