இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட குழு பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டனர்.
மாலை வடமாகாண ஆளுநர் , யாழ். மாவட்ட செயலர் மற்றும் யாழ். மாநகர முதல்வர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்திக்கவுள்ள நிலையில், நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாண மீனவர்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
No comments