வவுனியா நெடுங்கேணி பகுதியில் பெண்ணொருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (15) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா – நெடுங்கேணி – சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பாலசுந்தரம் சத்தியகலா (வயது 34) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. யாரால் , எதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
No comments