Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

போதை விருந்துக்கு அழைத்து 11 வயது சிறுமி வன்புணர்வு - 2 யுவதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது!


போதை விருந்தொன்றுக்கு 11 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு யுவதிகள் மற்றும் நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
 
கடந்த டிசம்பர் தெஹிவளையில் விருந்தொன்றுக்கு சென்ற சிறுமி மறுநாள் காலை வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 
 
அந்நிலையில் மறுநாள் மாலை சிறுமி வீடு திரும்பியுள்ளார். சிறுமி வீட்டிற்கு வந்தமை தொடர்பில் பெற்றோரால் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சிறுமியை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்த போது , சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டமையை அடுத்து , பொலிஸார் சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தியுள்ளனர். 
 
சிறுமியை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி , சிறுமி ஆபத்தான போதைப்பொருளை உட்கொண்டு உள்ளமையை கண்டறிந்ததுடன் , சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்துள்ளார். 
 
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் , சிறுமியை சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்திய போது , 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுமிக்கு வாட்ஸ் அப் ஊடாக யுவதி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
அந்த யுவதி ஊடாக மட்டக்குளியை சேர்ந்த இளைஞன் ஒருவனும் , ரிக் டொக் பிரபல்யமான , ரிக் டொக் கிரி சமன் என அழைக்கப்படும் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
அந்த பழக்கங்களின் அடிப்படையில் , ரிக் டொக் கிரி சமனின் அழைப்பின் பேரில் குறித்த சிறுமி வீட்டில் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு தெரியாமல் குறித்த விருந்துக்கு சென்றுள்ளார்.
 
விருந்தில் சிறுமிக்கு போதை பொருளை வழங்கி சிறுமியை அங்கிருந்தவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 
 
சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் நான்கு இளைஞர்கள் மற்றும் 2 யுவதிகளை கைது செய்துள்ளனர். 
 
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் குறித்த விருந்தில் கலந்து கொண்ட ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 
 
அதேவேளை விருந்து நடைபெற்ற இடம் போலியகொட பகுதியில் உள்ள இடம் என்றும், அங்கு மண்ணினால் கட்டப்பட்ட அறை ஒன்றிலையே தான் தங்க வைக்கப்பட்டு இருந்ததாகவும் , சிறுமி பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். 
 
குறித்த இடத்தினை கண்டறிவதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments