Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழை தொடர்ந்து கொழும்பில் கரையொதுங்கும் சடலங்கள்!


வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய சடலம் பம்பலப்பிட்டி மெரைன் டிரைவ் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு சடலங்களும் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வார காலப்பகுதியில், ஏழு சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன. ஒரு மாத காலம் கடந்த நிலையிலும் குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments