வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து பரவகும்புக நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வலது பக்கத்திலுள்ள பாதுகாப்பு வேலியில் நேற்று (09) மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டிப்பர் சாரதி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments