Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 17

Pages

Breaking News

வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை


வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

வவுனியா புதுக்குளம் தேவதளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் வீடு ஒன்றிற்குள் சத்தமாக குரைத்துக்கொண்டிருந்த நாய் ஒன்றினை வீட்டினைத்திறந்து வெளியே விட  சென்றபோது அங்கு பதுங்கியிருந்த பத்திற்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ளவர்களை தாக்கிவிட்டு அணிந்திருந்த எட்டுப்பவுண் தங்க நகைகள் , பதினோராயிரம் ரூபா பணம் என்பனவற்றை கத்தி முனையில் கொள்ளையிட்டு , தப்பிச்சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட குறித்த சம்பவத்தில் குடும்பஸ்தவரான சிறீஸ்கந்தவாசன் (வயது 59) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து தடயவியல்  பொலிஸார் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சகிதம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்