ஒரு தலைக்காதலால் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் 7 பேர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 7 பேரை கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை இளைஞன் ஒருவர் ஒரு தலையாக காதலித்துள்ளார். அவரின் காதலை யுவதி ஏற்காத நிலையில் , யுவதியை பின் தொடர்ந்து , தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
அந்நிலையில் யுவதியின் உறவினர்கள் சிலர் குறித்த இளைஞனின் செயலை கண்டித்து இருந்துள்ளனர். அதனால் உறவினர்களுக்கும் இளைஞனுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன் தன்னுடன் மேலும் ஆறு பேரை இணைத்துக்கொண்டு , அவரது உறவினர்கள் மீதும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதில் பெண்ணொருவர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டிருந்த நிலையில் , சந்தேக நபர்கள் தலைமறைவாகி இருந்துள்ளனர்.
அந்நிலையில் நேற்று புதன்கிழமை குறித்த சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த இடம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் அவர்ளை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
No comments