முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , இடியன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அக்கிராமத்தை சேர்ந்த சபீசன் (வயது 22) என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.
இடியன் துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டில் 47 மற்றும் 32 வயதுடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு முற்றிய நிலையலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் முன்னதாக , புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு , அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments