Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஆட்டினை பலியிட ஆட்டை பிடித்தவரின் தலையில் வெட்டு - சம்பவ இடத்திலையே குறித்த நபர் உயிரிழப்பு!


கோயில் திருவிழாவின் போது ஆட்டுக்குப் பதிலாக மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், வலசப்பள்ளி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன்படி கடந்த 16ம் திகதி கோயில் திருவிழாவில் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டது.

அப்போது சுரேஷ் என்பவர் பலி கொடுப்பதற்காக ஆட்டை பிடித்து நின்று கொண்டிருந்தார். திடீரென ஆடுகளை வெட்டிக் கொண்டிருந்த சலபதி என்பவர் ஆடை வெட்டுவதற்குப் பதிலாக சுரேஷ் தலையை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சலபதியைக் கைது செய்தனர்.

மேலும் சலபதி ஆடு வெட்டும் போது மதுபோதையில் இருந்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்குள் ஏதேனும் முன்பகை இருக்கிறதா? என்பது பற்றியும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு வெட்டும் போது தவறுதலாக மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments