நீர்கொழும்பு கடலில் நீராடிய இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , ஒருவர் காணாமல் போயுள்ளார்.
புத்தாண்டு தினமான நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை நீகொழும்பு துன்கல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கப்புன்கொட கடலில் ஐந்து இளைஞர்கள் நீராடிக்கொண்டு இருந்தவேளை , அவர்களை கடல் அலை அடித்து சென்றது.
அதனை அவதானித்த பிரதேசவாசிகள் அவர்களில் நால்வரை மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்தனர். ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் , பமுனகம மற்றும் ஏக்கல பகுதிகளை சேர்ந்த 17 மற்றும் 23 வயது இளைஞர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை அம்பேவெல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞன் காணாமல் போன நிலையில் வரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
No comments