கஸ்கிஸ்ஸ சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் நேற்று (07) பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மொரட்டுவ, சொய்சாபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (08) நடைபெறவுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments