Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஹெரோயினுடன் பயணித்த இரு தம்பதிகள் வவுனியாவில் குழந்தைகளுடன் கைது!


வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் 63கிராம் கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்குபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப்பயணித்த காரை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸார்  வழிமறித்து அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த காரில் 63.84 கிராம் கெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த சம்பவத்தில் காரில் பயணித்த தம்பதிகளான இருபெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை பொலிசார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்களுடன் அவர்களது 4 மற்றும் 9 மாதக்குழந்தைகளும் காரில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி மற்றும் மதவுவைத்தகுளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஈரற்பெரியகுளம் உதவிப்பொலிஸ் பரிசோதகர் சுகந் தலமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments