யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
துன்னாலை மேற்கை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது 27) எனும் இளைஞனே கைகளில் வெட்டு காயங்களுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments