Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முள்ளியவளை பெண் படுகொலை - தகாத உறவை பேணி வந்தவர் கைது!


முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் , குறித்த பெண்ணுடன் தகாத உறவை பேணி வந்த 33 வயதுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த இளைஞனை நேற்றைய தினம் கைது செய்து இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குறித்த நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments