முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு வருட கால பகுதிக்கு பின்னர் உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறொன்றில் இருந்து கடந்த 30.12.2020 ஆம் ஆண்டு மனித சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் உயிரிழந்தவரை அடையாளம் கண்டு , சடலத்தை அவரின் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
அந்நிலையில் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், கொலை குற்றவாளிகளை அடையாளம் கண்டிருந்தனர்.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் ஆக மூவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments