நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் வெடிப்பு சம்பவத்தில், 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான குறித்த ஊழியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் பாதுகாப்பு அதிகாரிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments