Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 8

Pages

Breaking News

உழுது கொண்டிருந்தவர் உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு  உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழும் போது இடம் பெற்றுள்ளது.
 
உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.