Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கசூரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு!


காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கோண்டாவில் தில்லையம்பதி பகுதியை சேர்ந்த யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவனான யோகராசா லோகீஸ்வரன் (வயது-17) எனும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


கோண்டாவிலிருந்து, புத்தாண்டு தினமான இன்றைய தினம் சனிக்கிழமை  20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். 

அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதனை கண்ணுற்ற ஏனையவர்கள் அவலக்குரல் எழுப்பியதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஒருவரை மீட்டனர். 

மற்றையவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில் , அவரைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்நிலையில் சுமார் நான்கு மணி நேர தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

No comments