விபத்தினை ஏற்படுத்திய நபரிடம் நியாயம் கேட்க போன பெண்ணொருவர் தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரிதீகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தையில் உள்ள தேவாலய சந்தி பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையுண்ட பெண்ணின் மகள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தேடிப் சென்று கொலையுண்ட பெண் விபத்து குறித்து விசாரித்ததில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதன்போது, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தனது கையிலிருந்த தலைக்கவசத்தால் குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ரிதீகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.ரிதீகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments