Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு


ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட சாரண ஆணையாளர் அவர்களின் தலைமையில் நேற்று புதன்கிழமை (23) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டதுடன், கொழும்புத் தலைமைக் காரியாலய சாரண ஆணையாளர்கள் திரு.அப்துல் முகஜித், திரு. அசோக்குமார் மற்றும் மாவட்ட சாரணர் ஆணையாளர்கள் மற்றும் உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்கள், அதிபர்கள், பெற்றோர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், விருதுபெறும் சாரண மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து இணையவழி நிகழ்நிலையில் நேரலை ஊடாக சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

அத்தோடு, ஜனாதிபதி விருதினைப் பெறத் தகுதியுடைய நாடு முழுவதுமுள்ள அனைத்து சாரணர்களையும்  கொவிட் தொற்றுச் சூழ்நிலையினை கருத்திற் கொண்டு  ஜனாதிபதி விருதினை வழங்கி வைக்கும் குறித்த நிகழ்வானது இணையவழி நிகழ்நிலைத் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து சாரணர்களையும் உள்ளடக்கியதாக இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 31பேர் ஜனாதிபதி சாரணர் விருதினைப் பெற்றிருந்ததோடு, இவர்களுக்கான ஜனாதிபதி சாரணர் விருதினை மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வழங்கிவைத்தார்.








No comments