Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்


கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான தொழில்துறை இறக்குமதிகளை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விடயம் குறித்து அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சீனா போன்ற மற்றுமொரு தேசத்துடன் கலந்துரையாடி, மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட கடன் வரிசையை இலங்கை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சீனத் தூதுவருடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும், வெற்றிபெற்றால் மூலப்பொருள் நெருக்கடிக்கு விடை கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments