Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பருத்தித்துறையில் சைக்கிள் திருட்டு சந்தேக நபர் கைது - 20 சைக்கிள்களில் 10 சைக்கிள் மீட்பு!


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளில் 20 துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவற்றில் 10 துவிச்சக்கர வண்டிகளே கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் கூறினர்

No comments