Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

7 வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியரை 30 வருடங்களின் பின் குத்திக் கொன்ற மாணவன்


7 வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞர் 101 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டின் வசித்த மரியா வெர்லிண்டன் (வயது 57) ஆசிரியையான அவர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்தி இருப்பது தெரியவந்தது.

அவரை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்த 16 மாதங்களுக்கு பின் ஆசிரியை மரியா வெர்லிண்டனை கொன்றது முன்னாள் மாணவர் என்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

37 வயதான கன்டர் உவென்ட்ஸ் என்பவர் தனது 7 வயதில் ஆரம்ப பாடசாலையில் படித்தபோது அவருக்கு ஆசிரியையாக மரியா வெர்லிண்டன் இருந்தார். அப்போது கன்டர் உவென்ட்ஸ் பற்றி ஆசிரியை மரியா சில கருத்துக்களை தெரிவித்தார்.

இது தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய கன்டர் உவென்டஸ் ஆத்திரம் அடைந்தார். அதை மனதில் வைத்து கொண்டே இருந்து அவர் 30 ஆண்டுகளுக்கு பின் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

No comments