Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புதிய கணவனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த முன்னாள் கணவன்!


குடும்ப பெண்ணின் புதிய கணவனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த முன்னாள் கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

முச்சக்கர வண்டி சாரதியான மொஹமட் ஷியாபிதீன் (வயது 51) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கொம்பனித்தெரு டோசன் வீதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணொருவர் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் கடந்த 16ஆம் திகதி மறுமணம் செய்துள்ளார். 

மறுமணத்தை அடுத்து நேற்றைய தினம் 17ஆம் திகதி மணமக்கள் திருமண வரவேற்பு உபசார நிகழ்வு இடம்பெற்றது. அவ்வேளை மணமகளின் முன்னாள் கணவர் நிகழ்வில் புகுந்து மணமகனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கொலை சந்தேக நபரை இன்றைய தினம் காலை கைது செய்துள்ளனர் 

No comments