Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தங்கையை தாக்கியதற்காக தந்தையை குத்தி கொலை செய்த மகன்..!


போதையில் மகளை தாக்கிய தகப்பனை மகன் கத்தியால் குத்தியதில் தந்தையார் உயிரிழந்துள்ளார். 

கந்தனை மேற்கு பகுதியை சேர்ந்த 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். 

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

உயிரிழந்த நபர் தினமும் போதையில் வந்து குடும்பத்தில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழமை போன்று நேற்றைய தினமும் போதையில் வந்து சாப்பாடு சரியில்லை என மகளை தாக்கியுள்ளார். 

அதனை அவதானித்த உயிரிழந்தவரின் மகன் , தனது தங்கையை தந்தை தாக்குவதை கண்டு ஆத்திரமுற்று கத்தியால் தந்தையை குத்தியுள்ளார். 

அதில் தந்தையார் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , தந்தையை கத்தியால் குத்திய 22 வயதான மகனை கைது செய்துள்ளனர். 

No comments