தெமட்டகொட பேஸ்லைன் மேம்பாலத்தில் பயணித்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
பொரளையில் இருந்து ஒருகொடவத்தை நோக்கி பயணித்த காரே தீ பிடித்து எரிந்துள்ளது.
கார் எரிந்த வேளையில் காரினுள் இருவர் இருந்ததாகவும், அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் காரின் இயந்திரம் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
No comments