பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட நெய்னாகாடு பகுதியை சேர்ந்த றியாஸ் முஹம்மட் ஆசீக் (வயது 13) மற்றும் முஹம்மட் இப்றாஹிம் (வயது 13) ஆகிய இரு சிறுவர்களுமே உயிரிழந்துள்ளனர்
குறித்த இரு சிறுவர்களும் தமது கிராமத்தில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றில் விறகுகளை சேகரிக்க சென்ற போது , யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
No comments