Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மின்சாரத்தை துண்டித்து போராட்ட காரர்கள் மீது தாக்குதல்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதோடு, கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம் என்பனவும் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளும் வாகனத்தின் மீதும் கல்லெறிந்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

No comments