யாழ்ப்பாணம் , பொன்னாலை - பருத்தித்துறை வீதியோரமாக காயங்களுடன் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments