எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி இனம்தெரியாதவர்களினால், படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை, மாவிட்டரை கம்மனவத்தையைச் சேர்ந்த எபசிங்ககே கனிஷ்க (41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சாரதியின் இல்லத்திற்குள் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை அத்துமீறி நுழைந்தவர்கள் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு அவரை படுகொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , இதுவரை கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments