முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிளிலும் சொகுசு வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,
No comments