உலக காடுகள் தினத்தை முன்னிட்டு, நேற்று திங்கட்கிழமை யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல பாலர் மாணவர்களுடன் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுசூழல் கழகமும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஞானக்குழந்தை ஆசிரியர் கா.மதுஷாந்தினி அவர்களின் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.
காடுகள் தொடர்பிலும் காட்டு விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் கழக செயலாளர் சசிகரன் பாலர் மாணவர்களுக்கு கதைகள் மூலம் எடுத்து கூறினார்.
No comments