கிரிக்கெட் சுற்றுப்போட்டியை பார்வையிட சென்ற மாணவன் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தை சேர்ந்த , பொகவந்தலாவ சென். மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்று வந்த பாரதிதாசன் (வயது 18) எனும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
பாடசாலை பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியை பார்வையிட செலவதாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவனை காணவில்லை என உறவினர்கள் தேடிய நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
No comments