களனி, தலுகம பிரதேசத்தில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக கொழும்பு – கண்டி வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மரக்குற்றிகளை எரித்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் வீட்டின் முன்னால் கூடியுள்ள போராட்ட காரர்களை அகற்றுவதற்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் வானை நோக்கி பல துப்பாக்கி வெட்டுக்களை தீர்த்து வருவதாகவும் , ரப்பர் துப்பாக்கி ரவைகளால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments